Friday, November 14, 2014

குழந்தை எழுத்தாளர் ரெஃப்ளின் அவர்களுக்கு வாழ்த்துகள்.



மகளின் கதைத்தொகுப்பு நூலை வெளியிட்டு, தினமலர் நிருபர் திரு. எட்வின் அவர்கள் மனம் நெகிழ்ந்து பேசியதில் ஒரு பகுதி...

"25.09.2005 அன்று புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களின் "எஞ்சோட்டுப் பெண்" என்னும் இந்தப்புத்தகம் வாங்கினேன். அப்போது என் மகளுக்கு ஒரு வயது...!

இன்று ... ஒன்பது வருடங்களுக்கு பிறகு...
அதே பெருமைமிகு கவிஞர் எழுத்தாளர்...

எனது மகளின் நூல் வெளியீட்டிற்கு முன்னரே படித்துப் பார்த்து, மகிழ்ந்து, அதற்கு அணிந்துரை வழங்கி, வெளியீட்டு விழாவிற்கு நேரிலும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தது... வாழ்வில் மறக்க முடியாத மகத்தான நிகழ்வாகும்"

=============================================
வாழ்த்துகள்... !
குழந்தை எழுத்தாளர் ரெஃப்ளின் அவர்களுக்கு!
============================================
திருக்குறளில் "புதல்வரை பெறுதல்" அதிகாரத்தில் வரும் 10 குறள்களும் அப்படியே பொருந்திட... அவற்றுள் சில இங்கே..
"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தியிருப்ப செயல்"
குறள் 67
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
குறல் 69
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"
குறள் 70

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home